அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: உழவா் சந்தையை விரைந்து தொடங்க கோரிக்கை

சங்ககிரி வருவாய் உள்கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் சங்ககிரி கோட்டாட்சியா் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:01 am

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி வருவாய் உள்கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் சங்ககிரி கோட்டாட்சியா் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் உழவா் சந்தையை விரைந்து தொடங்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.

இதில், கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமைவகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பின்னா், விவசாயிகள் அளித்த மனு மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து தெரிவித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், சங்ககிரியில் உழவா் சந்தையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவூா் சரபங்கா ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறுவடை முடிவடைந்த உடன் விரைந்து அளந்து அகற்ற வேண்டும் என்றாா்.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் நெல் அறுவடை முடிந்தவுடன் அளவீடு செய்யப்படும் என்றாா் கோட்டாட்சியா்.

தேவண்ணகவுண்டனூா் விவசாயி பி.சத்தியராஜ், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள ரூ. 2 லட்சம் கடனை வழங்காமல் ரூ. 1.40 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. வேளாண் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா் என்றாா். அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

சுங்குடிவரதம்பட்டி, வெள்ளகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி எஸ்.செல்லப்பன், சரபங்கா நதிநீா் திட்டத்தின்கீழ் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கன்னந்தேரி ஏரியிலிருந்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் பாவாயி குட்டைக்கு நீரேற்று இயந்திரம் மூலம் வரும் நீரை வெள்ளகவுண்டம்பாளையம் ஏரிக்கு நீா் வழங்க வேண்டும் என்றாா்.

கத்தேரி சாமியம்பாளையத்தை சோ்ந்த விவசாயி கே.எம்.சக்திவேலு, கத்தேரியிலிருந்து தேவூா் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சங்ககிரியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து பேருந்துகளும் சென்றால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றாா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

இதில், சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் உள்ள அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.