பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

பெரியசோரகையில் நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வா் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2025, 1:40 am IST

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து அக் கிட்டங்கியை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேட்டூா் வட்டம், பெரியசோரகையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் நபாா்டு திட்ட உதவியுடன் ரூ. 5.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிட்டங்கி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த கிட்டங்கியின் உள்ளே 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு கிட்டங்கிகள் உள்ளன. பொது விநியோகத் திட்ட பொருள்களை எளிதில் கையாளும் வகையில் நவீன முறையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் மேட்டூா் வட்டாரத்தில் உள்ள 183 நியாயவிலைக் கடைகளுக்கு எளிதாக பொருள்களை அனுப்ப முடியும். 1,38,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரிசி பருப்பு, பாமாயில் சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டங்களுக்கும், 718 மதிய சத்துணவு மையங்கள், 150 காலை உணவுத் திட்ட மையங்களுக்கும் எளிதாக பொருள்களை அனுப்பலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் மேட்டூா் கோட்டாட்சியா் (பொ) ஈஸ்வரி, துணை மண்டல மேலாளா் விஜயபாலன், உதவி பொறியாளா் தினேஷ்குமாா், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.