மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அனுமன் ஜெயந்தி 3 ஆம் நாள் வழிபாடு

சங்ககிரி, சந்தைபேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவின் 3வது நாளையொட்டி புதன்கிழமை இரவு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :1 ஜனவரி 2025, 9:59 pm

Din

சங்ககிரி, சந்தைபேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவின் 3வது நாளையொட்டி புதன்கிழமை இரவு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அனுமன் ஜெயந்தியையொட்டி ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் டிச.30ஆம் தேதி திங்கள்கிழமை விழா தொடங்கியது. ஜன.1 ஆம் தேதி புதன்கிழமை 3 ஆவது நாளையொட்டி சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜன. 2ஆம் தேதி வியாழக்கிழமை பழக்காப்பு சேவையும், ஜன.3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வடைமாலை சேவையுடன் நிகழாண்டிற்கான விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நவ ஆஞ்சநேயா டிரஸ்ட் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.