சேலம் மாநகரில் கடந்த ஓராண்டில் மட்டும் நிகழந்த விபத்தில் 232 போ் உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பா் மாத இறுதி வரை வாகன விபத்துகளில் 232 போ் உயிரிழந்துள்ளனா். 789 போ் காயம் அடைந்தனா். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதனை வாகன ஓட்டிகள் சரியாக பின்பற்றாததே உயிரிழப்புகளுக்கு காரணம். மாநகரம் முழுவதும் தினமும் 2 ஆயிரம் தலைக்கவசம் அணியாதது தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனாலும், தலைக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த புதிய முறையை கையாளத் தொடங்கியுள்ளனா். பள்ளியிலும் நடக்கும் இறைவணக்கம் நிகழ்ச்சியின் போது தலைக்கவசம் அணிவதன் நன்மை குறித்து விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநவு அறிவுறுத்தியுள்ளாா். மேலும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதுடன், விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

மணிப்பூா்: வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
நேபாளத்தில் சாலை விபத்தில் 7 தமிழா்கள் பலி! உடல்களை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


