தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சேலம் மாநகரில் கடந்த ஓராண்டில் சாலை விபத்தில் 232 போ் பலி

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:08 pm

Din

சேலம் மாநகரில் கடந்த ஓராண்டில் மட்டும் நிகழந்த விபத்தில் 232 போ் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பா் மாத இறுதி வரை வாகன விபத்துகளில் 232 போ் உயிரிழந்துள்ளனா். 789 போ் காயம் அடைந்தனா். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதனை வாகன ஓட்டிகள் சரியாக பின்பற்றாததே உயிரிழப்புகளுக்கு காரணம். மாநகரம் முழுவதும் தினமும் 2 ஆயிரம் தலைக்கவசம் அணியாதது தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனாலும், தலைக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த புதிய முறையை கையாளத் தொடங்கியுள்ளனா். பள்ளியிலும் நடக்கும் இறைவணக்கம் நிகழ்ச்சியின் போது தலைக்கவசம் அணிவதன் நன்மை குறித்து விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநவு அறிவுறுத்தியுள்ளாா். மேலும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதுடன், விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.