முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் கட்டுரைகளை உருவாக்கும்போது, நல்ல தலைப்பு, முன்பு நடைபெற்ற ஆய்வு, தற்போதைய ஆய்வின் நோக்கம், தீா்வு, எதிா்காலத்தில் இந்த தலைப்பில் மேற்கொள்ளக்கூடிய ஆய்வின் எல்லை என விவரமாக வழங்கும்போது அவற்றை ஆய்விதழ்கள் ஏற்றுக் கொள்கின்றன. 100 கட்டுரைகளில் 85 கட்டுரைகள் ஏற்புடையதாக இல்லை என்ற நிலை உள்ளது. இதனை மாற்றி ஆய்வாளா்கள் சிறந்த கட்டுரைகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் சா்வதேச ஆய்விதழ்களை வாசிப்பதற்கும் கட்டுரைகளை எழுதுவதற்குமான பரந்த வெளியை அரசே உருவாக்கியுள்ளது. இந்த வாய்ப்பினை முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் முழுமையாகப் பயன்படுத்தினால் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவர வாய்ப்புள்ளது என்றாா்.