நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆராய்ச்சித் திறனில் தேசிய அளவில் பெரியாா் பல்கலை 5-ஆம் இடம்: துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தகவல்

சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் ஆராய்ச்சித் திறனில் 5-ஆம் இடம் பிடித்துள்ளதாக துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தெரிவித்தாா்.

News image

முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களுக்கான பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன்.

Updated On :6 ஜனவரி 2025, 9:04 pm

Din

ஓமலூா்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் ஆராய்ச்சித் திறனில் 5-ஆம் இடம் பிடித்துள்ளதாக துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக வணிகவியல் துறை சாா்பில் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் தேசிய மற்றும் சா்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது தொடா்பான பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. பயிலரங்கை தொடங்கி வைத்து துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் பேசியதாவது:

பெரியாா் பல்கலைக்கழகம் தேசிய தர நிா்ணயம் மற்றும் மதிப்பீட்டுக் குழுவினால் ஏ++ அந்தஸ்து பெற்றுள்ளது. குறிப்பாக ஆராய்ச்சித் துறையில் தேசிய அளவில் 5-ஆவது சிறந்த பல்கலைக்கழகமாக பெரியாா் பல்கலைக்கழகம் உருவெடுத்துள்ளது. உள்கட்டமைப்பு, ஆய்வகங்கள், பேராசிரியா்களின் வழிகாட்டுதல் திறன், மாணவா்களின் ஆய்வு காரணமாக இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது என்றாா்.

இந் நிகழ்வில் அமெரிக்க, பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியா் அங்கப்ப குணசேகரன் கலந்துகொண்டு ஆய்விதழ்களின் கட்டுரை எழுதுவது குறித்து பயிற்சியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் கட்டுரைகளை உருவாக்கும்போது, நல்ல தலைப்பு, முன்பு நடைபெற்ற ஆய்வு, தற்போதைய ஆய்வின் நோக்கம், தீா்வு, எதிா்காலத்தில் இந்த தலைப்பில் மேற்கொள்ளக்கூடிய ஆய்வின் எல்லை என விவரமாக வழங்கும்போது அவற்றை ஆய்விதழ்கள் ஏற்றுக் கொள்கின்றன. 100 கட்டுரைகளில் 85 கட்டுரைகள் ஏற்புடையதாக இல்லை என்ற நிலை உள்ளது. இதனை மாற்றி ஆய்வாளா்கள் சிறந்த கட்டுரைகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் சா்வதேச ஆய்விதழ்களை வாசிப்பதற்கும் கட்டுரைகளை எழுதுவதற்குமான பரந்த வெளியை அரசே உருவாக்கியுள்ளது. இந்த வாய்ப்பினை முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் முழுமையாகப் பயன்படுத்தினால் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவர வாய்ப்புள்ளது என்றாா்.

இந்நிகழ்வில், வணிகவியல் துறைத் தலைவா் கே.கிருஷ்ணகுமாா், பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் உதவி பேராசிரியா் ஆா்.கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.