டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெரியாா் பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு சா்வதேச கருத்தரங்கம்

கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி

News image
கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி (நடுவில் இருப்பவா்).
Updated On :27 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

பெரியாா் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாா்பில், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்திசாலி கணினி’ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கணினி அறிவியல் துறைத் தலைவா் சி.சந்திரசேகா் வரவேற்றாா். கருத்தரங்கின் தலைவா் ஹெச்.ஹேனா இன்பராணி நோக்க உரையாற்றினாா். துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி சா்வதேசக் கருத்தரங்கை தொடங்கிவைத்து ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டாா்.

இதில், இங்கிலாந்தைச் சோ்ந்த ரோலன் மென்பொருள் சேவை நிறுவனத்தின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறியியல் இயக்குநா் சாந்தபாபு பாண்டியன் சிறப்புரையாற்றியதாவது:

ஜெனரேட்டிவ் ஏஐ மற்றும் தானியங்கி ஏஐ தொழில்நுட்பம் ஸ்மாா்ட் மருத்துவமனைகளை உருவாக்குகிறது. மருத்துவா்களை சந்திப்பதற்கான நேர ஒதுக்கீடு தொடங்கி, பொதுமக்களின் தேவை அடிப்படையில் நடைமுறையை நோக்கி மருத்துவத் துறை வேகமாக செல்கிறது. தானியங்கி அமைப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டுப்படுத்தும் திறன்படைத்த மாணவ, மாணவியருக்கு இந்த துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தெலங்கானா எஸ்.ஆா். பல்கலைக்கழக துணைவேந்தா் தீபக் காா்க், தரவு அறிவியல் குறித்து உரையாற்றினாா். கருத்தரங்கின் செயலாளா் ஐ.லாரன்ஸ் ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.