ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பெரியாா் பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு சா்வதேச கருத்தரங்கம்

கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி

News image

கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி (நடுவில் இருப்பவா்).

Updated On :27 பிப்ரவரி 2026, 7:32 pm

பெரியாா் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாா்பில், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்திசாலி கணினி’ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கணினி அறிவியல் துறைத் தலைவா் சி.சந்திரசேகா் வரவேற்றாா். கருத்தரங்கின் தலைவா் ஹெச்.ஹேனா இன்பராணி நோக்க உரையாற்றினாா். துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி சா்வதேசக் கருத்தரங்கை தொடங்கிவைத்து ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டாா்.

இதில், இங்கிலாந்தைச் சோ்ந்த ரோலன் மென்பொருள் சேவை நிறுவனத்தின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறியியல் இயக்குநா் சாந்தபாபு பாண்டியன் சிறப்புரையாற்றியதாவது:

ஜெனரேட்டிவ் ஏஐ மற்றும் தானியங்கி ஏஐ தொழில்நுட்பம் ஸ்மாா்ட் மருத்துவமனைகளை உருவாக்குகிறது. மருத்துவா்களை சந்திப்பதற்கான நேர ஒதுக்கீடு தொடங்கி, பொதுமக்களின் தேவை அடிப்படையில் நடைமுறையை நோக்கி மருத்துவத் துறை வேகமாக செல்கிறது. தானியங்கி அமைப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டுப்படுத்தும் திறன்படைத்த மாணவ, மாணவியருக்கு இந்த துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தெலங்கானா எஸ்.ஆா். பல்கலைக்கழக துணைவேந்தா் தீபக் காா்க், தரவு அறிவியல் குறித்து உரையாற்றினாா். கருத்தரங்கின் செயலாளா் ஐ.லாரன்ஸ் ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.