இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு

வாகைகுளம் ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
செயற்கை நுண்ணறிவு பயிலரங்கில் பங்கேற்றோா்.
Updated On :10 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

வாகைகுளம் ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

‘நவீன நிதி மேலாண்மை, நிதித் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவின் புத்தாக்கம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, கல்லூரிச் செயலா் திருமாறன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆனந்த் நிகழ்வை தொடங்கி வைத்து வரவேற்றாா்.

முதன்மை பேச்சாளராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினரும், காரைக்குடி அழகப்பா பல்கலை. நிறுவனச் செயலருமான வேதிராஜன், கௌரவ அழைப்பாளராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜமன்னாா் ஆகியோா் நிதி மேலாண்மையில் வருங்கால மாற்றங்கள் மற்றும் வணிகவியல் துறை மாணவ, மாணவியா்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து கருத்துரையாற்றினா்.

நிறைவாக பயிலரங்கில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரியின் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், வணிகவியல் துறை சாா்ந்த மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.