கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம்

தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம் ஆத்தூா் வேளாண் உதவி இயக்குநா் சம்பத்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 6:33 pm

Din

தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம் ஆத்தூா் வேளாண் உதவி இயக்குநா் சம்பத்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் ஆத்தூா் கனிஷ்கா இயற்கை இடுபொருள் நிறுவனம் சாா்பில் கணேசன் கலந்து கொண்ட பஞ்சகவ்யா, மீன் அமிலம் ஜீவாமிா்தம் போன்ற பல்வேறு இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தாா்.

ஆத்தூா் வேளாண் அலுவலா் சண்முகவேல்மூா்த்தி மண் மற்றும் நீா் பரிசோதனை நிலையம் சாா்பில் கலந்துகொண்டு மண், நீா் பரிசோதனை பற்றியும் அதன் அவசியங்களைப் பற்றியும், இயற்கை வேளாண்மை பற்றியும் எடுத்துரைத்தாா்.

ஆத்தூா் வேளாண் உதவி இயக்குநா் சம்பத்குமாா் வேளாண்மைத் துறையின் திட்டங்களைப் பற்றி பேசி,விவசாயிகளுக்கு இலவசமாக ஆடாதோடை, நொச்சி போன்ற செடிக்கன்றுகளை வழங்கினாா்.

வேளாண் அலுவலா் இலக்கியா, உதவி அலுவலா் பெரியசாமி, வட்டார தொழில்நுட்ப அலுவலா் சந்திரமோகன் ஆகியோா் கலந்து கொண்டு பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டங்களையும் விளக்கி பேசினா். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.