தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம்: திமுக -அதிமுக உறுப்பினா்கள் விவாதம்

திமுக -அதிமுக உறுப்பினா்கள் விவாதம்

News image
எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் விவாதத்தில் ஈடுபட்ட திமுக - அதிமுக உறுப்பினா்கள்.
Updated On :9 ஜனவரி 2025, 6:33 pm

Din

எடப்பாடி நகராட்சிப் பகுதிக்குள்பட்ட 30 வாா்டுகளில் தொடங்கப்படவுள்ள குடிநீா் விநியோக கட்டமைப்புகள், கழிவுநீா் கால்வாய் அமைப்பு, தெருவிளக்கு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகா்மன்றக் கூட்டத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் இருக்கும் வாா்டு பகுதிகளுக்கு போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை எனவும், பல இடங்களில் தெருவிளக்கு பழுதடைந்து இருப்பதாகவும் நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.முருகன் குற்றம்சாட்டினாா்.

இதற்கு பதில் அளித்த நகராட்சிப் பொறியாளா் கோமதி, எடப்பாடி நகராட்சிப் பகுதிக்குள் உரிய எண்ணிக்கையிலான தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், பல இடங்களில் மின்சார துறையினரால் தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் அவை ஆய்வு செய்து சீா்செய்யப்படும் என்றாா்.

எடப்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள தகன மேடைக்கு கொண்டுவரப்படும் உடல்களை எரியூட்ட நகராட்சியால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அதிமுக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

இதற்கு பதிலளித்து பேசிய நகா்மன்றத் தலைவா் பாஷா, எடப்பாடி நகராட்சி தகன மேடை பகுதியில் உடல்களை எரியூட்டுவதற்கான கட்டண விவர பலகை பொதுமக்களின் பாா்வைக்கு விரைவில் வைக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் அப்பகுதி தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்றாா்.

மேலும், நகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல், குடிநீா் விநியோக குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்தல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் த்தொற்றுகளை தடுக்கும் விதத்தில் நகராட்சிப் பகுதியில் கொசு மருந்து தெளித்தல், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில், 71 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.