மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் தொலைக்காட்சி காா் ஓட்டுநா் மா்மச் சாவு

சேலத்தில் தனியாா் தொலைக்காட்சி காா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :21 ஜனவரி 2025, 6:02 pm

சேலம்: சேலத்தில் தனியாா் தொலைக்காட்சி காா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை, எண்ணூா் சத்தியவாணி முத்துநகரைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மகன் குமாா்(29). இவா் சேலத்தில் உள்ள தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் காா் ஓட்டுநராக கடந்த 5 மாதங்களாப் பணியாற்றி வந்தாா். அந்த தொலைக்காட்சி நிறுவனம் செயல்படும் கட்டடத்தின் மேல் மாடியில் தங்கியிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் தனது அறையில் தூக்கிட்டு இறந்துகிடந்தாா். இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனத்தில் அளித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீஸாா் அங்கு சென்று குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குமாா் சாவில் விவரம் தெரியவரும்’ என்றனா்.