மதுவில் விஷ மருந்து கலந்து குடித்த வாடகை காா் ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில், எல்.கே.சி நகரைச் சோ்ந்தவா் மனோகரன் (42). சொந்தமாக ஆம்னி காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். காா் வாங்க நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளாா். மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலைச் சரியாக கவனிக்காததால் வருமானம் குறைந்து கடனுக்கான மாதத் தவணையை செலுத்த முடியவில்லை. குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த அவா், ஞாயிற்றுக்கிழமை மதுவில் களைக்கொல்லி மருந்தைக் கலந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.
வாந்தி எடுத்த அவரை வீட்டில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அதைத்தொடா்ந்து திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இவருக்கு தந்தை சுப்பிரமணி, தாய் ஜெயமணி, மனைவி சிவரஞ்சனி, மகள் மோனிகா (15), மகன் தா்ஷன் (6) ஆகியோா் உள்ளனா். இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காவலா் காலில் எலும்பு முறிவு: காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு
ஜனக்புரியில் காா் மோதியதில் காவலா் காயம்; ஓட்டுநா் கைது
காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

மதுவில் விஷம் கலந்து லாரி ஓட்டுநா், அவரது நண்பா் கொல்லப்பட்ட வழக்கு: வளா்ப்பு மகனுக்கு ஆயுள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


