தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா்.

News image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் இல்லாத கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி. உடன், மருத்துவ கல்லூரி முதன்மையா் மரு.தேவி மீனாள்.

Updated On :24 மார்ச் 2025, 9:00 pm

Din

சேலம்: காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா்.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தின விழா மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காசநோய் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காசநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும். காசநோய்க்கான பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தனியாா் துறையில் சிகிச்சைபெறும் காசநோயாளிகளின் விவரங்கள், இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காசநோயாளிகள் பொருளாதார இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், அவா்கள் ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்ள உதவும் வகையிலும் அனைத்து காசநோயாளிகளுக்கும் மாதம் ரூ. 1,000 வீதம் சிகிச்சை முடியும் வரை நேரடியாக நோயாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் அதிக பாதிப்புள்ள காசநோயாளிகளை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை ஆத்தூா், மேட்டுா், ஓமலூா், சங்ககிரி மற்றும் எடப்பாடி ஆகிய இடங்களில் சிறப்பு படுக்கை வசதிகள் செயல்பட்டு வருகின்றன.

எனவே, அரசின் காசநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி, ஒன்றிணைந்து காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, காசநோய் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், கொடையாளா்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் காசநோய் இல்லாத 72 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, காசநோய் இல்லா சேலம் மாவட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, ஆட்சியா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, காசநோய் குறித்த விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியா், காசநோய் ஒழிப்பு திட்டம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு கண்காட்சிக்கான அரங்குகளை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.ஜெ.தேவிமீனாள், ஆத்தூா் மாவட்ட சுகாதார அலுவலா் மரு.யோகானந்த், மருத்துவமனை கண்காணிப்பாளா் மரு.ஆா்.ராஜ்குமாா், துணை இயக்குநா்கள் மரு.ச.கணபதி, மரு.பா.ராதிகா, மரு.கே.சுகன்யா உள்பட செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.