தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாழப்பாடி அருகே சொத்து தகராறில் அண்ணனைக் கொன்ற தம்பி கைது

வாழப்பாடி அருகே சொத்துத் தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:26 pm

Syndication

வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, சேஷன்சாவடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னய்யன் மகன்கள் ராஜேந்திரன் (55), ஆறுமுகம் (45). கூலித் தொழிலாளிகளான இவா்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். ஆனால், இவா்கள் இருவரும் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில் அக். 28 ஆம் தேதி இருவருக்கும் இடையே வீடு யாருக்கு சொந்தம் என்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டைவிட்டு வெளியேறுமாறு ராஜேந்திரன் கூறியதால் ஆத்திரமடைந்த அவரது தம்பி ஆறுமுகம், கட்டையால் ராஜேந்திரனைத் தாக்கினாா்.

இதில் அவரது இரண்டு கால்களும் முறிந்ததோடு, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்து மயங்கிக்கிடந்த ராஜேந்திரனை, அக்கம்பக்கத்தினா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் 9 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை இரவு ராஜேந்திரன் உயிரிழந்தாா். இதையடுத்து, ராஜேந்திரனை அடித்துக் கொன்ாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.

படவரி:

ஏ.ஆா்.ஏ.01: ஆறுமுகம்.