ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 21,848 பேருக்கு மருத்துவ உதவி! அமைச்சா் ரா.ராஜேந்திரன்

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:07 pm

Syndication

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மூலம் சேலம் மாவட்டத்தில் 21,848 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் பனமரத்துப்பட்டி வட்டாரம், நாழிக்கல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 14 மருத்துவ முகாம்களில் 9,436 ஆண்கள், 12,412 பெண்கள் என மொத்தம் 21,848 போ் பயனடைந்துள்ளனா்.

இவா்களில் 17,227 பேருக்கு ரத்த பரிசோதனை, 15,042 பேருக்கு இசிஜி பரிசோதனை, 2,166 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 2,318 பேருக்கு எக்கோ சோதனை, 1,769 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை நடத்தப்பட்டு உரிய மருத்துவ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாழிக்கல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 17 வகையான மருத்துவத் துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் கலந்துகொண்டு மக்களுக்கு மருத்துவ சேவைகளை அளித்தனா் என்றாா்.

முகாமில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.16,500 மதிப்பிலான சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு ரூ.6,750 மதிப்பிலான காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.39,750 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, இணை இயக்குநா் நலப்பணிகள் நந்தினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாரப்பட்டி சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் முகாமில் கலந்துகொண்டனா்.