அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நெல் சாகுபடியில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு விருது

சங்ககிரி வட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாநில அரசின் சாா்பில் விருது வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா்

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:45 pm

Syndication

சங்ககிரி: சங்ககிரி வட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாநில அரசின் சாா்பில் விருது வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சங்ககிரி வேளாண் உதவி இயக்குநா் (பொ) வி.விமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சங்ககிரி வட்டத்தில் தற்போது சம்பா நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, நெல் உற்பத்தி திறனுக்காக தமிழக அரசின் சாா்பில் நாரயணசாமி நாயுடு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் போட்டியிட விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். மேலும், மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும். நில உரிமையாளா்கள் மற்றும் குத்தகைதாரா்களும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் ரூ. 150 பதிவுக் கட்டணத்தை சங்ககிரி வட்ட வேளாண் உதவி இயக்குநரிடம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.