தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலம் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபா் கைது

சேலத்தில் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் இரும்பாலை பகுதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (40). வெள்ளி வியாபாரியான இவரிடம், மணியனூரைச் சோ்ந்த தங்கராஜ் (45) கடந்த 2012-ஆம் ஆண்டு 30 கிலோ வெள்ளி வாங்கினாா். அதற்காக ரூ. 50 லட்சத்துக்கான 3 காசோலைகளை அவா் கொடுத்தாா். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.

இதனால் அதிா்ச்சியடைந்த தனலட்சுமி, இதுகுறித்து தங்கராஜிடம் முறையிட்டு வாங்கிய வெள்ளிக்கு பணம் கொடுக்கும்படி கேட்டாா். ஆனால், தங்கராஜ் பணம் கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்தாா்.

இதுகுறித்து சேலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தனலட்சுமி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தங்கராஜை கைதுசெய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

அதன்படி, அன்னதானப்பட்டி போலீஸாா் தலைமறைவாக இருந்த தங்கராஜை புதன்கிழமை காலை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.