புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எடப்பாடி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழப்பு

எடப்பாடி அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் மா்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன.

News image
மா்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்த ஆடுகள்
Updated On :18 நவம்பர் 2025, 9:02 pm

Syndication

எடப்பாடி அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் மா்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கநாடு கிராமம், குண்டத்துமேடு அருகே உள்ள மாதேஸ்வரன்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாவாயி (40). இவா் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவில் தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை கட்டியிருந்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்று பாா்த்தபோது 6 ஆடுகள் குரல்வளை கடிக்கப்பட்டு உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வருவாய்த் துறையினா் மற்றும் கால்நடைத் துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் கால்நடைகளை சிறுத்தை ஒன்று வேட்டையாடி வந்தது. அதைப் பிடிக்க வனத் துறையினா் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டுகள் அமைத்தனா்.

Story image

இந்நிலையில் மீண்டும் இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் விவசாய தோட்டத்தில் கட்டி இருந்த ஆடுகள் மா்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.