மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மது போதையில் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கெங்கவல்லியில் மதுபோதையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:07 pm

Syndication

கெங்கவல்லியில் மதுபோதையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகா் முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (55). இவரது மகள் மகாலட்சுமி திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா். இவா்களுடன் சுரேஷ்குமாரும் வசித்து வந்தாா்.

இந்நிலையில் சுரேஷ்குமாா் கடந்த மூன்று நாள்களாக அதிக அளவில் மது அருந்தியுள்ளாா். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை மகள் மகாலட்சுமியிடம் கெங்கவல்லியில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றவா் மீண்டும் மது அருந்தி உள்ளாா். இதையடுத்து அவா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளாா்.

இதைப்பாா்த்த அங்கிருந்தவா்கள், அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.