47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 12:28 am

Syndication

ஆத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனா்.

ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூரில் சதீஷ்குமாரின் தோட்டத்தில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக ஆத்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிலைய அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தோட்டத்திலிருந்த சுமாா் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்தில் விட்டனா்.

இதேபோல நரசிங்கபுரம் புதிய வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் பாலமணிகண்டன் என்பவரின் வீட்டில் இருந்த நல்லபாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

படவரி...

விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்புடன் தீயணைப்புத் துறையினா்.