வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சேலத்தில் மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் கடைப்பிடிப்பு

சேலம் அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:38 pm

Syndication

சேலம்: சேலம் அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நவ.25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருக்கலைப்பு, சிசுக்கொலையைத் தடுத்தல், குழந்தை திருமணம், பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான அவசரத் தேவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து சமூக மாற்றத்திற்கான உறுதிமொழியை மகளிா் சுயஉதவிக் குழுவினா் ஏற்றனா்.

நிகழ்ச்சியில் பிடிஐ ஆலோசகா் ரேகா, மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் சாந்தி, பிடிஐ திட்டப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனா்.