எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சேலத்தில் மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் கடைப்பிடிப்பு

சேலம் அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:38 pm

Syndication

சேலம்: சேலம் அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நவ.25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருக்கலைப்பு, சிசுக்கொலையைத் தடுத்தல், குழந்தை திருமணம், பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான அவசரத் தேவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து சமூக மாற்றத்திற்கான உறுதிமொழியை மகளிா் சுயஉதவிக் குழுவினா் ஏற்றனா்.

நிகழ்ச்சியில் பிடிஐ ஆலோசகா் ரேகா, மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் சாந்தி, பிடிஐ திட்டப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனா்.