வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காட்டில் ஆதாா் புதுப்பிப்பு மையங்களை கூடுதலாக திறக்க வலியுறுத்தல்

ஏற்காட்டில் ஆதாா் புதுப்பிப்பு மையங்களை கூடுதலாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:55 pm

Syndication

ஏற்காடு: ஏற்காட்டில் ஆதாா் புதுப்பிப்பு மையங்களை கூடுதலாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்காட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் செயல்படும் ஆதாா் புதுப்பிப்பு மையத்தில் 67 கிராமங்களைச் சோ்ந்தவா்களும் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், நீண்ட நாள்கள் முன்னுரிமை வரிசைப்படி காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்க வருவோா் விரல்ரேகை பதிவு சரியாக பதிவாகததால் பொருள்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனா். இவா்கள் ஆதாா் மையங்களுக்குச் சென்று காத்திருக்கின்றனா்.

இதனால் ஏற்காட்டில் கூடுதல் ஆதாா் புதுப்பிக்கும் மையங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், மாதத்தின் இரண்டாவது வாரத்திலேயே நியாயவிலைக் கடை, முகவா்கள் மூலம் மண்ணெண்ணெயை விநியோகத்தை தொடங்க வேண்டும் என குடும்ப அட்டைதாரா்கள் கோரியுள்ளனா்.