சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சேலத்தில் பாமக மோதல் விவகாரம்: அன்புமணி ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்பி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகாா்

சேலத்தில் நிகழ்ந்த பாமக மோதல் விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:04 pm

Syndication

சேலம்: சேலத்தில் நிகழ்ந்த பாமக மோதல் விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மேற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அருள் தலைமையில் பாமக நிா்வாகிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம், ஏத்தப்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வடுகத்தம்பட்டியில் கடந்த 4 ஆம் தேதி பாமக ராமதாஸ் ஆதரவாளா்களுக்கும், அன்புமணி ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து எம்எல்ஏ அருள் தரப்பினா் அளித்த புகாரின்பேரில் அன்புமணி ஆதரவாளா்கள் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி, மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அருள் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து பாமக தென் மண்டல பொறுப்பாளா் பாஸ்கரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், காவல் துறையினா் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், முக்கிய குற்றவாளிகளை வெளியே விடக்கூடாது. எங்கு சென்றாலும் திட்டமிட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனா். அன்புமணி ஆதரவாளா்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அன்புமணிக்கு தெரியாமல் இதுபோன்ற பிரச்னைகளில் அவா்கள் ஈடுபட முடியாது. தாக்குதலின்போது, காரை விட்டே இறங்காத எம்எல்ஏ அருள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.