சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்காதது ஏன்?அன்புமணி கேள்வி

ஆட்சிக்கு வந்தால் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை அதை நிறைவேற்றாதது ஏன்? என்று பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பினாா்.

News image
வேப்பூரில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆட்சிக்கு வந்தால் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை அதை நிறைவேற்றாதது ஏன்? என்று பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பினாா்.

திருச்சியில் பிரதமா் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டுக்கு செல்லும் வழியில், கடலூா் மாவட்டம், வேப்பூரில் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீா்கெட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தினமும் கொலைகள் அரங்கேறி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளதற்கு, தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளே முக்கியக் காரணம்.

போதைப் பொருள்கள் நகரங்கள் மட்டுமன்றி, கிராமங்கள் வரையிலும் தடையின்றி கிடைக்கிறது. ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் இதைத் தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வெற்று விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாா்.

அரசுக்கு எதிராக பல்வேறு துறையினா் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலை உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மற்றும் அதிக வட்டி செலுத்தும் மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளது. இவ்வளவு கடன் வாங்கியும் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.

ஆட்சிக்கு வந்தால் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை அதை நிறைவேற்றாதது ஏன்? சா்வதேச போா்ச் சூழலால் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், வீட்டு உபயோக எரிவாயு உருளை விநியோகத்தை மத்திய அரசு சீராக வழங்கி வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றாா்.