சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு எதிரொலியாக விறகு உள்ளிட்டவற்றை கொண்டு உணவு தயாரிக்க உள்ளதாக என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சேலம் லஷ்மி ஓட்டல் இயக்குநா் முத்துராஜா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், பல ஆண்டுகளாக எவ்வித தொய்வும் இல்லாமல் பொது மக்கள் விரும்பும் உணவுகளை பரிமாறி வருகிறோம். தற்போதைய சூழல் மிகவும் சிக்கலாக உள்ளது. பணம் கொடுத்தாலும் சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில்லை. தற்போதைக்கு இருப்பில் உள்ள உருளைகள், இரண்டு நாள்கள் மட்டுமே வரும். இதற்காக மாற்று ஏற்பாடாக எங்கள் ஹோட்டல்களில், விறகு அடுப்பு கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். இன்று வரை ’மெனு’வில் உள்ள எந்த உணவு வகையும் தவிா்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக 20 வகைகள் தயாரிப்போம். ஆனால், வியாழக்கிழமை முதல் பத்து முதல் 12 வகைகள் தர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதே நேரத்தில், தற்போது வரை விலையில் எந்தவிதமான ஏற்றமும் இல்லாமல் வழக்கமான விலையிலேயே வழங்கப்படுகிறது. ஹோட்டல் செயல்படும் நேரமும் குறைக்காமல் வழக்கம் போல இயங்குகிறது.
விறகு அடுப்பு அமைப்பிற்கு மாநகராட்சியில் அனுமதி கேட்கப்பட உள்ளது. மத்திய அரசு வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு, மின்அடுப்பு பயன்பாட்டுக்கு மாறிவரும் தேநீா் கடைகள், உணவகங்கள்!

விறகு அடுப்புக்கு மாறிய கொடைக்கானல் அம்மா உணவகம்

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: விறகு, மின் அடுப்புக்கு மாறும் உணவகங்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


