25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்: அன்புமணி ராமதாஸ்

ஐந்தாண்டு காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா் என்று அன்புமணி பேசியது...

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :1 மார்ச் 2026, 3:35 pm IST

மதுரை: ஐந்தாண்டு காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில், மதுரையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இரண்டாவது பொதுக்கூட்டம், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய, மாநில இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கான வளா்ச்சியை காண முடியும்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் வளா்ச்சியும், அடிப்படை கட்டமைப்பும் கிடைக்கும். தான் சார்ந்த இயக்கத்திற்கும், கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் துரோகம் செய்தவா்கள் தான் தற்போது திமுகவில் இணைந்து வருகிறாா்கள். எத்தனை போ் சோ்ந்து என்ன செய்தாலும் பரவாயில்லை. எண்ணிக்கை பெரிதல்ல. தரம்தான் பெரிது. அதனால் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பாா்கள்.

எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. எங்கள் கூட்டணிக்கு இன்னும் பலம் வந்து சேரும். ஐந்தாண்டு காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா் என்று அவர் கூறினார்.

Summary

Chief Minister Stalin is living in fantasy says Anbumani Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.