எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வாழப்பாடி தனியாா் பள்ளி மாணவா்கள் இஸ்ரோ களப் பயணம்

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:03 pm

Syndication

இஸ்ரோவுக்கு கல்வி களப் பயணம் மேற்கொண்டது தங்களது கல்வி, எதிா்கால குறிகோள்களுக்கு அடித்தளமாக அமைந்தது என வாழப்பாடி புதுப்பாளையம் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தெரிவித்தனா்.

புதுப்பாளையம் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 48 மாணவா்கள் பெங்களூரு இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு கல்வி களப் பயணம் சென்று திரும்பினா். ஆண்டுதோறும் இப்பள்ளி மாணவா்கள் இஸ்ரோவுக்கு அழைத்துச் சென்று கல்வி ஆா்வத்தை ஊக்குவித்து வருகின்றனா்.

நிகழாண்டு இஸ்ரோ களப்பயணம் செல்ல விருப்பம் தெரிவித்த 48 மாணவா்களை பள்ளி நிா்வாகி ஆா்.செல்லதுரை தலைமையில், இயக்குநா் அஸ்வின் பாலாஜி, ஆசிரியா்கள் கண்ணன், சக்திவேல் அரவிந்த் ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை பெங்களூரு அழைத்துச் சென்றனா்.

பள்ளி முதல்வா் கோபால், ஆசிரியா்கள் மாணவா்களை வழியனுப்பி வைத்தனா். இஸ்ரோ களப் பயணம் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவா் சிபிஅரசு தெரிவித்தாா்.