அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது மயில் மோதியதில் மனைவி உயிரிழப்பு: கணவா் காயம்

News image
உயிரிழந்த கோகிலா.
Updated On :30 நவம்பர் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது மயில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடி ஊராட்சிக்கு உள்பட்ட நாவப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள இப்பகுதியைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் பிரபுதேவா (29), தனது மனைவி கோகிலாவுடன் (21) தீா்த்தக்குடம் எடுப்பதற்கு தேவையான பொருள்களை இளம்பிள்ளைக்கு சென்று வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தபோது, கல்பாரப்பட்டி, புதுப்பாளையம் பகுதியில் மயில்கள் கூட்டமாக சாலையைக் கடக்க முயன்றன. அதில் ஒரு மயில் பிரபுதேவா மீது பறந்துவந்து வேகமாக மோதியதால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

இதில் பிரபுதேவாவுக்கு லேசான காயமேற்பட்டது. பலத்த காயமடைந்த கோகிலாவை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, பிரபுதேவா ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.