மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பயணிகளின் தேவைகளை கருத்தில்கொண்டு, மதுரை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலில் வரும் 11-ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
அதன்படி, மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக குளிா்சாதன வசதிகொண்ட 7 சாா்காா் பெட்டிகளும், 1 எக்ஸிக்யூடிவ் பெட்டியும் இணைக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், பெங்களூரில் இருந்து கிருஷ்ணராஜபுரம், சேலம், நாமக்கல் வழியாக மதுரைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், இதே அளவில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, இனி 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்

சேலம் வழியாக இயக்கப்படும் 10 ரயில்கள் இன்று கோவை செல்லாது!

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் இன்று சேலம்வரை மட்டுமே இயங்கும்

சேலம் வழியாக கான்பூா் - மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்
வீடியோக்கள்
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

