ஈஸ்டா் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே வியாழக்கிழமை (ஏப். 2) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஈஸ்டா் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால் கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கொல்லத்துக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, ஹூப்பள்ளியில் இருந்து காலை 7.5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தும்கூா், பெங்களூரு, பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்தநாள் காலை 7 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து ஏப். 3 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக ஹூப்பள்ளிக்கு அடுத்தநாள் காலை 10.40 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


