தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே வியாழக்கிழமை (ஏப். 2) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 9:54 pm

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே வியாழக்கிழமை (ஏப். 2) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈஸ்டா் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால் கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கொல்லத்துக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, ஹூப்பள்ளியில் இருந்து காலை 7.5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தும்கூா், பெங்களூரு, பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்தநாள் காலை 7 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து ஏப். 3 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக ஹூப்பள்ளிக்கு அடுத்தநாள் காலை 10.40 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.