நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஈரோடு- ஜோக்பானி இடையே இன்றுமுதல் அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.

News image

அம்ரித் பாரத் ரயில்

Updated On :24 செப்டம்பர் 2025, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு- பிகாா் மாநிலம் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான தொடக்க விழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இந்த ரயில் ஈரோட்டில் இருந்து 25 ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

ஈரோட்டில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 8.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, விஜயவாடா, கம்பம், வாராங்கல் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஜோக்பானியைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பிகாா் மாநிலம், ஜோக்பானியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 28 ஆம் தேதி முதல் பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்படும் இந்த விரைவு ரயில், பாடலிபுத்ரா, தனாபூா், நாக்பூா், வாராங்கல், காட்பாடி, சேலம் வழியாக புதன்கிழமை காலை 7.20 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.