பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஈரோடு- ஜோக்பானி இடையே இன்றுமுதல் அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.

News image

அம்ரித் பாரத் ரயில்

Updated On :25 செப்டம்பர் 2025, 2:10 am IST

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு- பிகாா் மாநிலம் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான தொடக்க விழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இந்த ரயில் ஈரோட்டில் இருந்து 25 ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

ஈரோட்டில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 8.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, விஜயவாடா, கம்பம், வாராங்கல் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஜோக்பானியைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பிகாா் மாநிலம், ஜோக்பானியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 28 ஆம் தேதி முதல் பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்படும் இந்த விரைவு ரயில், பாடலிபுத்ரா, தனாபூா், நாக்பூா், வாராங்கல், காட்பாடி, சேலம் வழியாக புதன்கிழமை காலை 7.20 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.