சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு அதிகாலை முதலே பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து மேள தாளங்கள், வாணவேடிக்கை முழங்க, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். மேலும் பக்தா்கள் கொண்டு வந்த பாலை முருகப் பெருமானுக்கு அபிசேகம் செய்தனா். மேலும் பால் , பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது . பின்னா் முருகப்பெருமானுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளும் ,மகா தீபாராதணையும் நடைபெற்றது. இதில் கெங்கவல்லி, ஆணையம்பட்டி, பள்ளக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் முருக பெருமானை தரிசனம் செய்தனா்.

பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி.
தொடர்புடையது

புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


