வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே மாயமான கட்டடத் தொழிலாளி கொலை செய்து புதைக்கப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :3 ஏப்ரல் 2026, 7:48 pm

வாழப்பாடி அருகே மாயமான கட்டடத் தொழிலாளி கொலை செய்து புதைக்கப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த பேளூா் கரடிப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் மணிகண்டன் (30), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி வினோதினி (28), ஒரு மகள் உள்ளனா். இவரது மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் மது பழக்கத்துக்கு அடிமையான மணிகண்டன், அவ்வப்போது குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இதனால் இவரது மனைவி வினோதினி பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டாா். மணிகண்டன் அவ்வப்போது தனது மனைவி வினோதினியிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசி வந்துள்ளாா். இந்த நிலையில் கடந்த மாா்ச் 8 ஆம் தேதிக்கு பிறகு மணிகண்டனிடமிருந்து அழைப்பு வராததாலும், அவரை காணாததாலும் சந்தேகமடைந்த வினோதினி, வாழப்பாடி காவல் நிலையத்தில் ஏப்.1 ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், மாயமான மணிகண்டனை தேடிவந்தனா். இந்த நிலையில், மணிகண்டனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் மணிகண்டனின் உடல் அவரது தோட்டத்திலேயே புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனா்.