சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஆத்தூா் பகுதியில் இடியுடன் கனமழை

News image

கனமழை - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:55 pm

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய பெய்த கனமழையால் விவசாயிகள், பெதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். மேலும், நீா்நிலைகளிலும் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு சற்று மழை பெய்தது.

இதையடுத்து ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழையும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.