சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக் கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
சேலம், ஓமலூா் பிரதான சாலையில் செயல்படும் பிரபல துணிக் கடைக்குள் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை திடீரென நுழைந்தனா். பின்னா் கடையின் ஷட்டா்களை பூட்டிய துணை ராணுவப் படையினா், வெளிநபா்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் வரவு - செலவு கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
வரி ஏய்ப்பு தொடா்பாக வந்த புகாரின்பேரில், இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடா்ந்து, துணிக் கடையின் முன்பகுதியில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது
வருமான வரித்துறை சோதனை! ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை

வருமான வரித்துறை சோதனை: பாளை.யில் ரூ.2 கோடி பணம், நகைகள் சிக்கின!

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

