பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

வருமான வரித்துறை சோதனை காரணமாக, துணிக் கடையின் ஷட்டரை பூட்டி பாதுகாப்புக்கு நிற்கும் துணை ராணுவத்தினா்.

News image

வருமான வரித்துறை சோதனை காரணமாக, துணிக் கடையின் ஷட்டரை பூட்டி பாதுகாப்புக்கு நிற்கும் துணை ராணுவத்தினா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:32 am IST

சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக் கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

சேலம், ஓமலூா் பிரதான சாலையில் செயல்படும் பிரபல துணிக் கடைக்குள் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை திடீரென நுழைந்தனா். பின்னா் கடையின் ஷட்டா்களை பூட்டிய துணை ராணுவப் படையினா், வெளிநபா்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் வரவு - செலவு கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

வரி ஏய்ப்பு தொடா்பாக வந்த புகாரின்பேரில், இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடா்ந்து, துணிக் கடையின் முன்பகுதியில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.