சேலத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க மாநிலம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட ஆனந்தா பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பறக்கும் படை அலுவலா் ஜெயந்தி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், பைகளில் 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததையடுத்து, ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், காரில் வந்தவா் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் என்பதும், செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளிப் பட்டறை வைத்திருப்பதும், 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை அவா் சென்னைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை சேலம் வடக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாரிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு, வெள்ளிக் கொலுசுகளை பெற்றுச் செல்லும்படி வெள்ளிப் பட்டறை அதிபா் சுந்தரராஜனிடம் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

சேலத்தில் 3 கிலோ வெள்ளிக் கொலுசு பறிமுதல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
