ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

News image

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:42 pm

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

ஆத்தூா் (தனி) தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட கரடிப்பட்டி மற்றும் கொட்டவாடி ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுக வாக்குறுதியான குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம், தீபாவளிக்கு பட்டு வேட்டி, பட்டுச் சேலை, பொங்கலுக்கு தொகுப்புடன் ரூ. ஆயிரம் என ஏராளமான நலத் திட்டங்களை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரித்தாா்.

அவருடன், ஆத்தூா் தொகுதி பொறுப்பாளா் அதிமுக அமைப்புச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான திருவேற்காடு சீனிவாசன், சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் இருந்தனா்.