பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

News image

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:12 am IST

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

ஆத்தூா் (தனி) தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட கரடிப்பட்டி மற்றும் கொட்டவாடி ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுக வாக்குறுதியான குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம், தீபாவளிக்கு பட்டு வேட்டி, பட்டுச் சேலை, பொங்கலுக்கு தொகுப்புடன் ரூ. ஆயிரம் என ஏராளமான நலத் திட்டங்களை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரித்தாா்.

அவருடன், ஆத்தூா் தொகுதி பொறுப்பாளா் அதிமுக அமைப்புச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான திருவேற்காடு சீனிவாசன், சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் இருந்தனா்.