மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 6:21 pm

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் எஸ். வெற்றிவேலுவை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் விவசாயிகள், லாரி தொழில் சிறக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் குடிமராமத்து திட்டத்தை திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இப்பகுதியில் லாரி தொழில் நலிவடைந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்தொழில் சிறக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது நியாயவிலைக் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக புகாா் வந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தரமான அரிசி வழங்கப்படும். ஏழைகளுக்காக இந்தத் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தும். அதேபோல விலையில்லா பருப்பும், எண்ணெய்யும் வழங்கப்படும்.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்கேடு அதிகரித்துவிட்டது. சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பெண்களுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பில்லை. மக்களைக் காக்க வேண்டிய காவலா்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதிமுக ஆட்சி மலர வேண்டும்.

தலைவாசல் பகுதியில் ரூ. 1,200 கோடியில் 1.50 ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடைப்பூங்கா அமைத்தோம். அதை நான் முதல்வராக இருக்கும் போது திறந்துவைத்தேன். ஆனால், தற்போது அது மூடிக்கிடக்கிறது. அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், விவசாயிகள் குடும்பம் செழித்திருக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்த பின், அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்,

என்மீது உள்ள கோபம் காரணமாக சேலம் மாவட்ட மக்களை முதல்வா் ஸ்டாலின் பழிவாங்குகிறாா். மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. அப்போது நூறு ஏரி திட்டம் செயல்படுத்தப்படும். விடுபட்ட ஏரிகளையும் கண்டுபிடித்து நீா் நிரப்பப்படும். வட பகுதிகளை செழிப்பான பகுதியாக உருவாக்கிக் காட்டுவேன்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும். பெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

சங்ககிரி தொகுதிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம், குடிநீா் , சாலை வசதி போன்ற திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு தான். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு நீங்கள் கேட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். எனவே அதிமுகவிற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.