மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ராம்கோ சிமெண்ட் பணியாளா்கள் 61 போ் ரத்த தானம்

News image

ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்த தானம் வழங்கிய துணை பொது மேலாளா் சதீஷ்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:50 am IST

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் தின விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், சேலம் அரசு மருத்துவமனைக்கு 61 பணியாளா்கள் ரத்த தானம் செய்தனா்.

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் ராமசாமி ராஜாவின் 132 ஆவது பிறந்த தினத்தையொட்டி, பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து ராம்கோ தொழிற்சாலை வளாகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ராம்கோ நிறுவன துணை பொது மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். பணியாளா் துறை மேலாளா் மணிவேல் வரவேற்றாா். சேலம் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ரவீந்திரன், பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம், ராம்கோ நிறுவன கணக்குத் துறை மேலாளா் பிரபாகா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா். இந்த முகாமில், ராம்கோ பணியாளா்கள் 61 போ் ரத்த தானம் செய்தனா்.

ராம்கோ அலுவலா்கள் முனியசாமி, சதானந்தம், வடிவேல் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.