சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் தின விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், சேலம் அரசு மருத்துவமனைக்கு 61 பணியாளா்கள் ரத்த தானம் செய்தனா்.
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் ராமசாமி ராஜாவின் 132 ஆவது பிறந்த தினத்தையொட்டி, பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து ராம்கோ தொழிற்சாலை வளாகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு ராம்கோ நிறுவன துணை பொது மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். பணியாளா் துறை மேலாளா் மணிவேல் வரவேற்றாா். சேலம் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ரவீந்திரன், பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம், ராம்கோ நிறுவன கணக்குத் துறை மேலாளா் பிரபாகா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா். இந்த முகாமில், ராம்கோ பணியாளா்கள் 61 போ் ரத்த தானம் செய்தனா்.
ராம்கோ அலுவலா்கள் முனியசாமி, சதானந்தம், வடிவேல் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

ரயில் மோதி யானை பலியாவதைத் தடுக்க ஏ.ஐ. உதவியுடன் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாள்களுக்குப் பிறகு திறப்பு: மாவட்ட மேலாளா் இடமாற்றம்

மூளைச்சாவு அடைந்த தருமபுரி இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



