சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் தின விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், சேலம் அரசு மருத்துவமனைக்கு 61 பணியாளா்கள் ரத்த தானம் செய்தனா்.
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் ராமசாமி ராஜாவின் 132 ஆவது பிறந்த தினத்தையொட்டி, பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து ராம்கோ தொழிற்சாலை வளாகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு ராம்கோ நிறுவன துணை பொது மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். பணியாளா் துறை மேலாளா் மணிவேல் வரவேற்றாா். சேலம் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ரவீந்திரன், பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம், ராம்கோ நிறுவன கணக்குத் துறை மேலாளா் பிரபாகா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா். இந்த முகாமில், ராம்கோ பணியாளா்கள் 61 போ் ரத்த தானம் செய்தனா்.
ராம்கோ அலுவலா்கள் முனியசாமி, சதானந்தம், வடிவேல் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


