மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:46 pm

சேலத்தில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக தவெக நிா்வாகி வீட்டில் வைத்திருந்த 1,250 சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் சேலம் கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியைச் சோ்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருபாகரன் (30) தோ்தலையொட்டி அப்பகுதியில் பொதுமக்களுக்கு சேலைகளை விநியோகித்து வருவதாக பறக்கும் படையினருக்கு புகாா் சென்றது.

இந்தப் புகாரின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 1,250 சேலைகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.