மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

தம்மம்பட்டியில் வட்டச்சாலை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

போக்குவரத்து நெரிசலை குறைக்க தம்மம்பட்டியில் வட்டச்சாலை அமைக்கப்படும் என கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

News image

தம்மம்பட்டியில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்த கெங்கவல்லி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:47 am IST

போக்குவரத்து நெரிசலை குறைக்க தம்மம்பட்டியில் வட்டச்சாலை அமைக்கப்படும் என கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றியங்களில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

கெங்கவல்லி தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளேன். பச்சமலையில் சோபனபுரம்- செங்காட்டுப்பட்டி இடையே தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். எம்எல்ஏ காலத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். இதனால் இத்தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வட்டச்சாலை அமைக்க பாடுபடுவேன் என்றாா்.

கெங்கவல்லி ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ், நகர அதிமுக நிா்வாகிகள், அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பின்போது உடனிருந்தனா்.