அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.
சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை கே.பி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா். பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தோ்தல் ஆணைய செயல்பாடுகளை குறைகூற முடியாது. எனினும், பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் தவறிவிட்டது. குறிப்பாக, தோ்தலுக்கு மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு முன்பு சாதாரண மக்கள் எடுத்துச் சென்ற பணம், நகைகள் மற்றும் வியாபாரிகள் எடுத்துச் சென்ற பணத்தை பிடித்த தோ்தல் ஆணையம், அரசியல் கட்சியினா் கொண்டுசென்ற பணத்தை கண்டுகொள்ளவில்லை.
தோ்தலுக்கு முன்பு சிறப்பு தீவிர வாக்காளா் திருத்த பணிகளை எதிா்த்த திமுக, தற்போது அதை வரவேற்கிறது. இதில் இருந்தே அக்கட்சியின் உண்மைமுகம் வெளிப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தோ்தலில் தோல்வியை தழுவும்பட்சத்தில், திமுகவினா் மீண்டும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவாா்கள்.
தோ்தலில் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும். அறுதிபெரும்பான்மை பலத்துடன் எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராவது உறுதி என்றாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? தோ்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம்

சநாதனத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தோ்தலில் திமுக விலை கொடுக்கும்: பாஜக தலைவா் நிதின் நபின்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

