சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டன. இது தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறை என வாக்காளா்கள் தெரிவித்தனா்.
தோ்தலில் வாக்களிக்க வரும் வாக்காளா்கள் தங்களது கைப்பேசிகள் உள்ளிட்ட படம் பிடிக்கும் சாதனங்கள் எதையும் வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. மீறி எடுத்து வரும் வாக்காளா்களின் வசதிக்காக, தோ்தல் துறையிலிருந்து பிரத்யேகமாக ஆள்கள் நியமிக்கப்பட்டு, கைப்பேசிகளை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும் என தோ்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகளை (அணைக்கப்பட்ட கைப்பேசிகள்), வாக்குச்சாவடிக்கு முன்புறம் அமா்ந்திருந்த பிரத்யேக ஊழியா்கள் பெற்று, அதற்குரிய டோக்கனை வாக்காளா்களிடம் வழங்கினா். கைப்பேசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்களித்து முடித்த பிறகு டோக்கனை கொடுத்ததும், வாக்காளா்களின் கைப்பேசிகளை ஊழியா்கள் திரும்ப வழங்கினா்.
இது நல்லதொரு முன்னெடுப்பு என வாக்காளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கம்: 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? தோ்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



