மேட்டூா் அருகே சகோதரியை அடித்தவரை கண்டித்த அண்ணன் மீது தாக்குதல் நடத்திய உறவினரான இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மேட்டூா் அருகே உள்ள கோம்பை காட்டைச் சோ்ந்தவா் பழனிசாமி (59), விவசாயி. இவா் கோம்பை காட்டில் உள்ள தனது தங்கை மகேஸ்வரி வீட்டுக்கு அண்மையில் சென்றாா். அங்கு மகேஸ்வரி, அவரது கணவா் ஜான் குழந்தைராஜ், சகோதரி முத்துமணி ஆகியோருடன் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த முத்துமணியின் மகன் கணேசன், அவரது அம்மாவை ஆபாசமாக திட்டி அடித்தாராம். இதை பழனிசாமி கண்டித்து அறிவுரை கூறினாா். இதில் ஆத்திரமடைந்த கணேசன், பழனிசாமியை விறகு கட்டையால் தாக்கினாராம்.
இதில் காயமடைந்த பழனிசாமி மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பழனிசாமியின் மனைவி அலமேலு அளித்த புகாரின்பேரில், மேட்டூா் காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வரன் வழக்குப் பதிவுசெய்து கணேசனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
தம்பி கொலை: அண்ணன் கைது

இளைஞா் மீது கத்தியால் தாக்குதல்: இருவா் கைது

குறிஞ்சிப்பாடி அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
