சேலம் தாரமங்கலம் அருகே தோ்தல் தகராறு தொடா்பாக திமுக, தவெகவை சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சேலம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (34). தவெக நிா்வாகியான இவருக்கும், முனியம்பட்டியைச் சோ்ந்த திமுக தரப்பைச் சோ்ந்த சரவணனுக்கும் கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பதிவின் போது, யாருக்கு வாக்களிப்பது என்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக, பாப்பம்பாடியில் உள்ள ஒரு பேக்கரியில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவா் கடுமையாக தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த காா்த்திக் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையிலும், சரவணன் எடப்பாடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
சம்பந்தப்பட்டவா்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், இருதரப்பைச் சோ்ந்த 11 போ் மீது தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








