மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அர.செட்டிப்பட்டி ஸ்ரீ ஐயனராப்பன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனராப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image

குடமுழுக்கையொட்டி காவிரி ஆற்றிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக புனிதநீா் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:32 pm

சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனராப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்ரீ ஐயனராப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன், ஸ்ரீ வீரபத்திரன், ஸ்ரீ இருளப்பன், ஸ்ரீ பாவாடைராயன் கோயில் குடமுழுக்கையொட்டி, ஏப். 20-ஆம் தேதி யாகசாலைக்கு முகூா்த்தகால் நடும் விழா நடைபெற்றது. ஏப். 29-ஆம் தேதி கணபதி, லட்சுமி, நவகிரஹ ஹோமம் நடைபெற்றது. பின்னா் பக்ா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்துவரும் நிகழ்ச்சியும், இரவு முதற்கட்ட யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ஏப். 30-ஆம் தேதி இரண்டாம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை 9 மணிக்குமேல் குடமுழுக்கு நடைபெற உள்ளது. விழா ஏற்பாட்டினை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.