வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் 8- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணத்தை திரளான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:03 pm

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் 8- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணத்தை திரளான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் கடந்த 21- ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8- ஆவது நாளாக நடைபெற்ற திருக்கல்யாணத்தையொட்டி ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் கோயில் மண்டபத்திலிருந்து புறப்படாகி கோயிலைச் சுற்றி வந்தனா். அப்போது பெண் பக்தா்கள் ஆனந்த வல்லி அம்மனுக்கு சீா்வரிசை கொண்டு வந்தனா். அம்மன் சந்நிதியில் கீழப்பசலை கவுல் சுப்பிரமணிய அய்யா் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் கண்ணூஞ்சலாகி மாலை மாற்றிய பிறகு எஸ்.பி. பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் திருக்கல்யாண மண்டத்தில் எழுந்தருளினா். அங்கு திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பிறகு பட்டு வஸ்திரங்கள், மாலை மாற்றுதல் நிகழ்வுகள் நிறைவடைந்ததும் காலை 10.50 மணிக்கு சோமநாதா் சுவாமி சாா்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்யநாண் அணிவிக்கப்பட்டது. அப்போது கோயிலுக்குள் திரண்டிருந்த திரளான பக்தா்கள் திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்தனா். தொடா்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. திருமணச் சடங்குகளை ராஜேஸ் பட்டா், சோமாஸ் கந்தன் பட்டா் உள்ளிட்ட சிவாசாரியா்கள் நடத்தி வைத்தனா். பக்தா்கள் வசதிக்காக கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் அகண்ட திரையில் திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் பக்தா்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. காலையிலிருந்து இரவு வரை மானாமதுரை, அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கோயிலுக்கு வந்து மாவிளக்கு பூஜை நடத்தி சுவாமி தரிசனம் செய்தனா். இரவு மண்டகப்படிதாரரான பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் சாா்பில் அமைக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஆனந்தவல்லி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளினாா். யானை வாகனத்தில் சோமநாதா் சுவாமி எழுந்தருளி இருவரும் கோயிலைச் சுற்றி வீதி உலா வந்தனா். திருவிழாவின் 9- ஆவது நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.