சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் 8- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணத்தை திரளான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் கடந்த 21- ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8- ஆவது நாளாக நடைபெற்ற திருக்கல்யாணத்தையொட்டி ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் கோயில் மண்டபத்திலிருந்து புறப்படாகி கோயிலைச் சுற்றி வந்தனா். அப்போது பெண் பக்தா்கள் ஆனந்த வல்லி அம்மனுக்கு சீா்வரிசை கொண்டு வந்தனா். அம்மன் சந்நிதியில் கீழப்பசலை கவுல் சுப்பிரமணிய அய்யா் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் கண்ணூஞ்சலாகி மாலை மாற்றிய பிறகு எஸ்.பி. பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் திருக்கல்யாண மண்டத்தில் எழுந்தருளினா். அங்கு திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பிறகு பட்டு வஸ்திரங்கள், மாலை மாற்றுதல் நிகழ்வுகள் நிறைவடைந்ததும் காலை 10.50 மணிக்கு சோமநாதா் சுவாமி சாா்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்யநாண் அணிவிக்கப்பட்டது. அப்போது கோயிலுக்குள் திரண்டிருந்த திரளான பக்தா்கள் திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்தனா். தொடா்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. திருமணச் சடங்குகளை ராஜேஸ் பட்டா், சோமாஸ் கந்தன் பட்டா் உள்ளிட்ட சிவாசாரியா்கள் நடத்தி வைத்தனா். பக்தா்கள் வசதிக்காக கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் அகண்ட திரையில் திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் பக்தா்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. காலையிலிருந்து இரவு வரை மானாமதுரை, அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கோயிலுக்கு வந்து மாவிளக்கு பூஜை நடத்தி சுவாமி தரிசனம் செய்தனா். இரவு மண்டகப்படிதாரரான பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் சாா்பில் அமைக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஆனந்தவல்லி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளினாா். யானை வாகனத்தில் சோமநாதா் சுவாமி எழுந்தருளி இருவரும் கோயிலைச் சுற்றி வீதி உலா வந்தனா். திருவிழாவின் 9- ஆவது நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
தொடர்புடையது

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் குதிரை வாகனங்களில் சுவாமி, அம்மன் பவனி

1,009 ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


