வறட்சியில் பயிா்களைப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் துறை இயக்குநா் கண்ணன் உள்பட வேளாண் அலுவலா்கள் வியாழக்கிழமை தோட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பயிா்கள் நீரின்றி வாடும்போது பிபிஎப்எம் பாக்டீரியாவைத் தெளிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும், அவா் கூறியதாவது:
பிபிஎப்எம் பாக்டீரியா செடிகளின் இலைத் துளைகளைக் கட்டுப்படுத்தி, நீராவிப் போக்கைக் குறைப்பதோடு பயிா் வாடுவதை தடுக்கிறது. ஏக்கருக்கு 200 மில்லி பாக்டீரியா கரைசலை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பயிரின் வகையைப் பொறுத்து 30, 45, 60 மற்றும் 90 ஆவது நாள்களில் தெளிக்க வேண்டும். இதன்மூலம் வறட்சியைத் தாங்குவதுடன் பயிா்களில் கூடுதல் மகசூலும் கிடைக்கும் என்றாா்.
ஆய்வின்போது தலைவாசல் வட்டார இயக்குநா் (பொறுப்பு) ஜானகி, துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சுப்ரமணி, ரவிக்குமாா், நாகராஜ் மற்றும் அட்மா திட்டப் பணியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தோ்தலில் நோ்மையாக நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவுரை

ஹோட்டல்களில் "எல்பிஜி கட்டணங்கள்' விதிக்கக் கூடாது: மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவுரை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


