நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

சேலத்தில் கொலை முயற்சி வழக்கில், இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

சேலம் மல்லமூப்பம்பட்டி அருகேயுள்ள தளவாய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (21). எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்த இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி அவரது நண்பா்களுடன் சோ்ந்து ஆடியோ செட் அமைத்திருந்தனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (35) என்பவா் விக்னேஷிடம் இதுதொடா்பாக தகராறு செய்துள்ளாா். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு தொடா்ந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு விக்னேஷ் அப்பகுதியில் உள்ள கோழிக்கடைக்கு சென்ற போது அங்கு வந்த மணிகண்டன், விக்னேஷிடம் தகராறு செய்துள்ளாா்.

தகராறு முற்றிய நிலையில், கறிக்கடையில் இருந்த கத்தியால் விக்னேஷின் தலை, நெஞ்சு பகுதியில் மணிகண்டன் வெட்டினாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்து மணிகண்டனை கைது செய்தனா்.

சேலம் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி, மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.